மரபு, பண்பாடு, விழுமியம், வரலாறு, மொழி என்பன ஓர் இனத்தின் அடையாளங்கள் ஆகும். இவையே அவ்வினத்தின் இருப்புக்கான ஆணிவேராக அமைகின்றன. தமிழினம் இவ்வடையாளங்களை மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சுமந்து வருகின்றது. இவற்றை, புலம்பெயர் நாட்டில் நாம் இழந்து விடக் கூடாது என்பதற்காகவும் இவற்றை எமது அடுத்த தலைமுறை அறிய வேண்டும் என்பதற்காகவும் 1993 ஆம் ஆண்டு கனடாத் தமிழ்க் கல்லூரி உருவாக்கம் பெற்றது. கனடிய அரசில் வருவாய் நோக்கற்ற அமைப்பாக இக்கல்லூரி பதியப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் இக்கல்லூரியில் இணைந்து பல்லாயிரம் மாணவர்கள் தமிழ், தமிழர் சார்ந்த கற்கை நெறிகளைக் கற்று வெளியேறியுள்ளனர். .
தமிழர் எங்கள் பேர்! தமிழே எமக்கு வேர்!